Tuesday, September 30, 2008

நாக்க மூக்கா - காதலில் விழுந்தேன்



2008 ன் சூப்பர் ஹிட் பாடல் - நாக்க மூக்கா - காதலில் விழுந்தேன் படத்தில் இருந்து




http://www.ziddu.com/downloadlink/2278195/nakkamukka.3gp

Saturday, September 20, 2008

அமைதிக்குப் பெயர்தான் சாந்தி

அமைதிக்குப் பெயர்தான் சாந்தி
அந்த அலையினில் ஏதடி சாந்தி

http://www.ziddu.com/download/2098016/Amaithikkupeyar.3gp.html

படம் - ஒரு தலை ராகம்

சேது - எங்கே செல்லும் இந்த பாதை

எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவர்

http://www.ziddu.com/download/2148599/sethu.3gp.html

படம் : சேது
இசை : இளையராஜா

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி

ஸ்ருதியும் லயமும் ஒன்று சேர
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா

உலக வாழ்க்கை நடனம்
நீ ஒப்புக் கொண்ட பயணம்
அது முடியும் போது தொடங்கும்
நீ தொடங்கும்போது முடியும்

மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி
தெரியும் தெரிந்தும் மனமே லலலா லலலா
தாளமிங்கு தப்பவில்லை
யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா

இருதயம் அடிக்கடி இறந்தது தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
என் கதை எழுதிட மறுக்குது அ அ ஆ அ அ ஆ
ஸ்ருதியும் லயமும் ஒன்று சேர

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா

பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன திரிந்து
இரவுதோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது

பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன திரிந்து
இரவுதோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது

இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே

பாவமுண்டு பாவமில்லை
வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை

அ அ அ அ அ அ அ அ அ அ

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுத்தது என் பேனா
ஸ்ருதியும் லயமும் ஒன்று சேர

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா

உனக்கென இருப்பேன்,

படம்: காதல்
பாடல்: உனக்கென இருப்பேன்
பாடியவர்: ஹரி சரண்
பாடல் வரிகள்:நா.முத்துக்குமார்

http://www.ziddu.com/download/2148598/Unekkena.3gp.html

உனக்கென இருப்பேன்,
உயிரையும் கொடுப்பேன்.
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்.
கண்மணியே, பொன்மணியே,
அழுவதேன், கண்மணியே!
வழித்துணை நான் இருக்க,

(உனக்கென இருப்பேன்)

கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும்.
கண்மணி காதலின் நெஞ்சம்தான் தாங்கிடுமா?
கல்லறை மீதுதான் பூத்த பூக்கள்
என்றுதான் வண்ணாத்திப்பூச்சிகள் பார்த்திடுமா?

மின்சார கம்பிகள் மீது
மைனாக்கள் கூடு கட்டும்.
நம் காதல் தடைகளை தாண்டும்.
வளையாமல் நதிகள் இல்லை,
வலிக்காமல் வாழ்க்கை இல்லை.
வரும் காலம் காயம் ஆற்றும்.
நிலவொளியை மட்டும் நம்பி
இலையெல்லாம் வாழ்வதில்லை,
மின்மினியும் ஒளி கொடுக்கும்.

தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய்.
தோழியே, இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்.
தோளிலே நீயுமே சாயும்போது
எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்.

வெந்நீரில் நீ குளிக்க
விறகாகித் தீ குளிப்பேன்,
உதிரத்தில் உன்னை கலப்பேன்.
விழிமூடும்போது முன்னே பிரியாமல் நான் இருப்பேன்,
கனவுக்குள் காவல் இருப்பேன்.
நான் என்றால் நானேயில்லை,
நீதானே நானாய் ஆவேன்.
நீ அழுதால் நான் துடிப்பேன்.

(உனக்கென இருப்பேன்)

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

படம் : அறை எண் 305 ல் கடவுள்
பாடல் : குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

http://www.ziddu.com/download/2146620/kuraionrum.3gp.html

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்

படம் : ஆட்டோகிராப்
http://www.ziddu.com/download/2146621/Ninavugal.3gp.html
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களில் பதிந்ததினால்
கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனைப் பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எரிய
பெண்னே உன்னால் முதிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

(நினைவுகள்)

காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னை காதலிக்க உன் தாய்மொழியை
நொடிகள் எல்லாம் நோய்பட்டு எனை
சுமந்து போக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி என்
மெளனத்தைக் கூட எரிக்கிறதே
சுவாசிக்க கூட முடியவில்லை
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை
(நினைவுகள்)

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்

படம் : சுப்ரமணியபுரம்
http://www.ziddu.com/download/2146619/kankalirandal.3gp.html
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்

என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றிக்

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத, பகலும் அல்லாத,
பொழுதுகள் உன்னோடு கழியுமா?
தொடவும் கூடாத, படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா?

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை!

(கண்கள்...)

கரைகள் அண்டாத, காற்றும் தீண்டாத,
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்?
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்

உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

(கண்கள்...)

சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே

பாடல்:சொன்னது நீதானா சொல் சொல் சொல்
குரல்: சுசீலா
வரிகள்:கண்ணதாசன்

http://www.ziddu.com/download/2148597/Sonnathu.3gp.html

சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே

(சொன்னது)

இன்னொரு கைகளிலே யார் யார் நானா
எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே

(சொன்னது)

மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே
இறுதிவரைத் துணையிருப்பேன் என்றதும் நீதானே

இன்று
(சொன்னது)

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா

(சொன்னது)


Thursday, September 11, 2008

சர்க்கரை நிலவே! பெண் நிலவே!

http://www.ziddu.com/downloadlink/2131586/SakkariNilave.3gp

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

(சக்கரை நிலவே ...)

மனம் பச்சை தண்ணீ தான் பெண்ணே
அதை பற்ற வைத்தது உன் கண்ணே
என் வாழ்கை என்னும் காட்டை எரித்து
குடை காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா ?

(சக்கரை நிலவே ...)

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணர தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே அந்த வார்த்தை இல்லை
அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமிதேன்
கண்ணே உன் பொன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதே
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா ?
அதில் கொள்ளை போனது என் தவறா ?
பிரிந்து சென்றது உன் தவறா ?
நான் புரிந்து கொண்டது என் தவறா ?
ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதையல்ல கல்லின் சுவரா ?

(கவிதை பாடின ...)

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றால் சுசீலா ' வின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்தர் சிலை
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பது சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய் ?

(சக்கரை நிலவே ...)

நீ காற்று! நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்!

http://www.ziddu.com/downloadlink/2131585/neekatru.3gp

நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீயிருக்கும் வரைதான் நான் இருப்பேன்

(நீ காற்று)

நீயலை நான் கரை
என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல்
நீ விழ வேண்டாம் நான் விழுவேன்
நீ கிளை நான் இலை
உனை ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தறிப்பேன்
நீ விழி நான் இமை
உன்னை சேரும்வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ சுவாசம் நான் தேகம்
நான் உன்னை மட்டும் உயிர்தொட அனுமதிப்பேன்

(நீ காற்று)

நீ வானம் நான் நீலம்
உன்னில் நானாய்க் கல்ந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை
நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில்
உன் வருகை பார்த்துத்தான் நானிசைப்பேன்
நீ உடை நான் இடை
உன்னை உறங்கும்பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி
என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பேன்

(நீ காற்று)

சொல்லாமலே யார் பார்த்தது பூவே உனக்காக


http://www.ziddu.com/downloadlink/2131583/sollamale.3gp

சொல்லாமலே
யார் பார்த்தது
நெஞ்சோடு தான் பூ பூத்தது

மழை சுடுகின்றதே அடி காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா .. ..

சொல்லாமலே யார் பார்த்தது ..

மல்லிகை பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சு மேதை முள்ளை போல குத்து கின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
கண்கள் தூக்கம் கெட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
கண்ணே உன் முந்தானை காதல் வலையா
உன் பாறை குற்றால சாரல் மழையா
அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா
நீ மீட்டும் பொன் வீணை எந்தன் இடையா
இதையம் நழுவுதடி உயிரும் கரையுதடி உன்னோடு தான் .. ...

சொல்லாமே யார் பார்த்தது

கண்ணுக்குள் உந்தன் முகம் ஒட்டி கொண்டது
சுக சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிகொண்டது
என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளி சென்றது
நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளி கொண்டது
அன்பே நான் எந்நாளும் உன்னை நினைத்து
முள் மீது பூவானேன் தேகம் இளைத்து
வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாத சந்தோஷ உத்தம் நடத்து
உலக அதிசயத்தில் ஒன்றுக்கு உரியது நம் காதலா

என்ன அழகு! எத்தனை அழகு! லவ் டுடே

http://www.ziddu.com/downloadlink/2131582/ennaalagu.3gp

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே

சின்ன அழகு சித்திர அழகு
சிறுநெஞ்சைக் கொத்திய அழகு
இன்றெந்தன் தோள் சாய்ந்ததே

எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசைத் தைத்தாள்
சுட்டும் விழிப் பார்வையில் சுகம் வைத்தாள்

நான் காதலின் கடலில் விழுந்து விட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்துவிட்டேன்

(என்ன அழகு)

அன்பே உன் ஒற்றைப் பார்வை
அதைத் தானே யாசித்தேன்
கிடையாதென்றால் கிளியே
என் உயிர்போக யோசித்தேன்

நான்காண்டுத் தூக்கம் கெட்டு
இன்றுன்னைச் சந்தித்தேன்
காற்றும் கடலும் நிலவும் அடி
தீக்கூடத் தித்தித்தேன்

மாணிக்கத் தேரே உன்னை
மலர் கொண்டு பூஜித்தேன்
என்னை நான் கிள்ளி இது
நிஜம்தானா சோதித்தேன்
இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள் வான் போகுமே

(என்ன அழகு)

நான் கொண்ட ஆசையெல்லாம்
நான்காண்டு ஆசைதான்
உறங்கும் போதும் ஒலிக்கும் அடி
உன் கொலுசின் ஓசைதான்

நீ வீசும் பார்வை இல்லை
நெருப்பாச்சி நெஞ்சம்தான்
வலியின் கொடுமை முடிய அடி
தமிழ்வார்த்தை கொஞ்சம்தான்

இன்றேதான் பெண்ணே உன்
முழுப்பார்வை நான் கண்டேன்
கைதொட்ட நேரம் என்
முதல் மூச்சும் நான் கொண்டேன்

மகராணியே மலர்வாணியே இனி
என் ஆவி உன் ஆவியே

(என்ன அழகு)


படம் : லவ் டுடே

Wednesday, September 10, 2008

ஈரமான ரோஜாவே என்னைக்கண்டு மூடாதே

http://www.ziddu.com/downloadlink/2098174/EramanaRojave.3gp

ஈரமான ரோஜாவே என்னைக்கண்டு மூடாதே
கண்ணீல் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

(ஈரமான)

என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகம் (2)
உன் வாசலில் எனைக் கோலம் இடு இல்லை என்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே...
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து

(ஈரமான)

நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை (2)
என் நெஞ்சிலே ஒரு துக்கம் இல்லை கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
என் காதலி...
உன் போல என்னாசை தாங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

(ஈரமான)

கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள்


http://www.ziddu.com/download/2131238/kanakaanum.3gp.html
கனா காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ

இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயத்தில் மெல்லிய சலனம்
இனி இரவுகள் இன்னொரு ஒரு நரகம்
இளமையின் அதிசயம்
இது கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கனவினில் அவரவர் உருவம்
சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும்
கடவுளின் ரகசியம்

உலகில் மிக இனித்திடும் பாஷை
இதயம் ரெண்டு பேசிடும் பாஷை
மெதுவா இனி மழை வரும் ஓசை ஆ..
(கனா காணும்..)

நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறு என்றால் நட்பு என்று பேரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ
திரி தூண்டி போனா விரல் தேடி அலைகிறதோ

தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி இல்லையே ஆ..
(கனா காணும்..)

இது என்ன காற்றில் இன்று ஈர பதம் குறைகிறதே
ஏகாந்தம் பூசிக்கொண்டு அந்தி வேலை அழைக்கிறதே
அதி காலை நேரம் எல்லாம் தூங்காமல் விடிகிறதே
விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே
நடை பாதை கடலில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்

படப்படப்பாய் சில கோபங்கள் தோன்றும்
பனி துளியாய் அது மறைவது ஏன்
நில நடுக்கம் அது கொடுமைகள் இல்லை
மன நடுக்கம் அது மிக கொடுமை ஆ..
(கனா காணும்..)

படம்: 7G ரெயின்போ காலணி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, மதுமிதா, உஸ்தாட் சுல்தான் கான்

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி


http://www.ziddu.com/downloadlink/2098314/Kaathirunthu.3gp


காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணைச்சா நிம்மதியாகுமடி

(காத்திருந்து)


முக்குளிச்சு நானெடுத்த முத்து சிப்பி நீதானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ளே பத்திரமா வச்சேனே
வச்ச இடம் காணாம நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்
நான் படிக்கும் மோகனமே நான் படைச்ச சீதனமே
தேன் வடிக்கும் பாத்திரமே தென் மதுரப் பூச்சரமே
கண்டது என்னாச்சு கண்ணீரில் நின்னாச்சு

(காத்திருந்து)


நீரு நிலம் நாலு பக்கம் நான் திரும்பிப் பார்த்தாலும்
அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அத்தனையும் நீயாகும்
நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற
நாடியில சூடேத்தி நீதான் வாட்டுற
ஆலையிட்ட செங்கரும்பா ஆட்டுகிற என் மனசை
யார விட்டு தூது சொல்லி நானறிவேன் உம்மனசை
நெஞ்சமும் புண்ணாச்சு காரணம் கண்ணாச்சு

(காத்திருந்து)


படம்: வைதேகி காத்திருந்தாள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன்

கடவுள் வாழும் கோவிலிலே கற்பூறதீபம்

http://www.ziddu.com/downloadlink/2130510/kadavulvaalum.3gp
கடவுள் வாழும் கோவிலிலே கற்பூறதீபம்
கலை இழந்த மாடத்திலே முகாறி ராகம்..முகாறி ராகம்
கடவுள் வாழும் கோவிலிலே கற்பூறதீபம்

முந்தாணை பார்த்து முன்னூறு கவிதை
என்னாளும் எழுதும் கவிஞர்கள் கோடி
முந்தாணை பார்த்து முன்னூறு கவிதை
என்னாளும் எழுதும் கவிஞர்கள் கோடி
முன்னாடி அறியா பெண்மனதை கேட்டு
அன்புண்டு வாழும் காளையர் கோடி
ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்

.......கடவுள் வாழும்.........

கிணத்துக்குள் வாழும் தவளையை போல
மனத்துக்குள் ஆடும் ஆசைகள் கோடி
கிணத்துக்குள் வாழும் தவளையை போல
மனத்துக்குள் ஆடும் ஆசைகள் கோடி
கண்கெட்ட பின்னே சூரிய உதயம் எந்தபக்கம்
ஆனால் எனக்கென்ன போடி
ஒருதலை ராகம் எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்

........கடவுள் வாழும்.............